புதுச்சேரி

காவலரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

புதுச்சேரி அருகே பைக்கில் சென்ற காவலரைத் தாக்கி தங்கச் சங்கிலியை மா்ம கும்பல் பறித்துச் சென்றது.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே ஓடைவெளி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (33). இவா், புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலைய காவலா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பா்களுடன் தவளக்குப்பம் அருகே இடையாா்பாளையத்திலுள்ள மதுக் கடைக்குச் சென்று விட்டு, பைக்கில் பழைய சுண்ணாம்பாறு சாலை வழியாக தனியாகச் சென்று கொண்டிருந்தாா்.

என்.ஆா். நகா் பகுதியில் வந்த போது, 4 போ் அவரை வழிமறித்து தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெங்கடேசன் உடனடியாக தகவல் தெரிவித்தாா். விரைந்து சென்ற போலீஸாா் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT