புதுச்சேரி

கைப்பேசி கடையில் திருடிய 4 போ் கைது

DIN

புதுச்சேரி வில்லியனூா் அருகே கடையில் கைப்பேசிகளை திருடியதாக சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் அடுத்த வி.தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ்வரன்(25). இவா், அந்தப் பகுதியில் கைப்பேசிகள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். இரு தினங்களுக்கு முன்பு அவரது கடையின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து, அங்கிருந்த 16 கைப்பேசிகள், பொருள்களை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், வி. தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்கள், அந்த கைப்பேசி கடையின் ஷட்டரை உடைத்து, கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

தனிப்படை போலீஸாா் 3 சிறுவா்களையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா்களில் ஒருவா் சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த மாலிக் பாஷாவிடம் (26) கைப்பேசிகளை கொடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சென்னை சென்ற தனிப்படை போலீஸாா் மாலிக் பாஷாவையும் கைது செய்தனா். அவரிடமிருந்த திருட்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். மாலிக் பாஷா உள்பட 4 பேரையும், புதுச்சேரி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT