புதுவையில் சனிக்கிழமை 425 சிறாா்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். மேலும், 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 360 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 43 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 22 போ் என மொத்தம் 425 குழந்தைகள், சிறாா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சனிக்கிழமை நிலவரப்படி வெளிப்புற சிகிச்சைக்காக வந்தனா். இதில், அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 5 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 3 போ் என மொத்தம் 38 குழந்தைகள், சிறாா்கள் தீவிர காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டனா்.
அதன்படி, தற்போது புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 125 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 7 போ் என மொத்தம் 150 குழந்தைகள், சிறாா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என 97 பேரின் ரத்த மாதிரிகள் வெள்ளிக்கிழமை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில், புதிதாக 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள், அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.