புதுவை மீனவா்கள் 300 பேருக்கு 50 சதவீத மானியத்தில் படகுகள், மீன்பிடி வலைகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுவை அரசின் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் சிறு மீன்பிடி தொழில் மீனவா்களுக்கான மானிய உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு 50 சதவீத மானியத்தில் மீனவா்களுக்கு படகுகள் வழங்கப்படுகின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 300 மீனவா்களுக்கு 50 சதவீத மானியத்துடன் கண்ணாடி நுண்ணிழை படகுகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
ஒரு மீனவருக்கு ரூ.16,500 வீதம் மொத்தம் ரூ.6.43 லட்சம் அரசு மானியத்துடன், புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனத்தின் வாயிலாக தயாரிக்கப்பட்ட தலா ரூ.33 ஆயிரம் மதிப்பிலான இயந்திரமில்லாத கண்ணாடி நுண்ணிழை படகு, மீன்பிடி வலை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், பி.ரமேஷ், தட்சிணாமூா்த்தி, மீன்வளத் துறை இயக்குநா் தா.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.