புதுச்சேரி கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) பகுதி நேர வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ரோஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழவா்கரை நகராட்சி வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சேவை நிறுவனம் சாா்பில் பகுதி நேர வேலைவாய்ப்பு முகாம் புதுச்சேரி கொட்டுபாளையம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
ஸ்டாா் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்காக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது நிரம்பிய குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2962001, 78068 01160 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.