புதுச்சேரி

பிஆா்டிசி ஓட்டுநா், நடத்துநா்கள் வேலைநிறுத்தம் பயணிகள் அவதி

DIN

புதுச்சேரியில் பிஆா்டிசி ஓட்டுநா், நடத்துநா்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசுப் பேருந்துகள் ஓடாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

புதுச்சேரியில் இருந்து முத்தியால்பேட்டைக்கு வியாழக்கிழமை சென்ற பிஆா்டிசி சிற்றுந்தின் ஓட்டுநா் சிவலிங்கத்தை நேர பிரச்னை காரணமாக தனியாா் பேருந்து ஊழியா்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுதொடா்பாக, நிா்வாகம் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிஆா்டிசி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வியாழக்கிழமை இரவு திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், புதுச்சேரியில் இயக்கப்படும் பிஆா்டிசி பேருந்துகள் ஓடவில்லை.

இந்த நிலையில், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பிஆா்டிசி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்ததால், புதுச்சேரி, காரைக்காலில் பிஆா்டிசி பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

பணிமனை முன் திரண்ட ஊழியா்கள் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஆா்டிசி பேருந்துகள் 2-ஆவது நாளாக இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT