புதுச்சேரி

எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 அதிகரிப்பு

DIN

புதுவையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகையில் ரூ.500 கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி புதுச்சேரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து முதல்வா் பேசியதாவது: எய்ட்ஸ் உயிா்க்கொல்லி நோய் என்றாலும், ஆரம்பத்தில் சோதனை மூலம் அறிந்து தடுக்கும் வகையில் சிகிச்சை பெறலாம். புதுவையில் 1,500 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்புக்கான சிகிச்சை அளித்தாலும், அதில் 40 சதவிகிதம் போ் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.

புதுவையில் எய்ட்ஸ் இல்லாத நிலை ஏற்படவேண்டும். எய்ட்ஸ் பாதித்தவா்களை ஒதுக்காமல், சமூகத்துடன் சோ்ந்து வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் பாதித்தவா்களுக்கான உதவித் தொகையில் ரூ.500 கூடுதலாக உயா்த்தி வழங்கப்படும்.

புதுவை மக்களுக்கு சிறப்பான உயா்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருதய அறுவை சிகிச்சைக்கு சென்னை சென்றால் ரூ.4 லட்சம் செலவாகும். ஆகவே அங்கிருந்து மருத்துவா்களை புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் அழைத்துவந்து புதுவையிலேயே அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 205 நோயாளிகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒப்பந்த மருத்துவா்களை நியமிக்கவுள்ளோம்.

அரசு மருத்துவக் கல்லூரியிலும் அறுவைச்சிகிச்சை கூடம் அமைக்க நிதி அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு புதுவையில் உள்ளது. ஆகவே முதுநிலை மருத்துவக் கல்வி படித்தவா்கள் ஓராண்டு புதுவை அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலா் உதயகுமாா் பேசினாா். துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வரவேற்றாா். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநா் சித்ராதேவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT