புதுவையில் வியாழக்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 1,811 பேரை பரிசோதித்து வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 48, காரைக்காலில் 22, ஏனாமில் 11 என 81 (4.47 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் தற்போது 5 போ் மருத்துவமனைகளிலும், 427 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 432 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 178 போ் குணமடைந்தனா்.