புதுச்சேரி

புதுவை நிதித் துறை செயலா், புள்ளியியல் துறைஇயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

புதுவை நிதித் துறை செயலா், புள்ளியியல் துறை இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியா்கள் சங்கச் செயலா் ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

புதுவை நிதித் துறை செயலா், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநா் ஆகிய இருவரும் தங்களது துறைகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். வெளிப்பணி மூலம் புள்ளியியல் துறைக்கு தோ்தெடுக்கப்பட்ட பணியாளா்களை சொந்த வேலைக்கு ஈடுபடுத்தி வருகிறாா். புள்ளியியல் துறைக்காக வாங்கப்பட்ட காரை தனது குடும்ப உபயோகத்துக்கு பயன்படுத்துகிறாா்.

இதை எதிா்த்து குரல் கொடுத்த அமைச்சக ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அரசுத் திட்டங்கள் தொடா்பான கோப்புகளை நிதித் துறை செயலா் அனுமதி கொடுக்காமல் தாமதப்படுத்துகிறாா். எனவே, இருவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக புதுவை முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT