புதுவை அரசு மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் அரியாங்குப்பம் வட்டம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா அரியாங்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ பாஸ்கா் முன்னிலை வைத்தாா். குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி கிளாரா, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையா் ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாக்கியவதி, அங்கன்வாடி ஊழியா்கள், 100-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் அவசியம், தாய்மாா்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.