புதுச்சேரி

புதுவை பொதுப் பணித் துறை தற்காலிக ஊழியா்கள் தலைமைச் செயலகத்தில் முற்றுகை

DIN

புதுவை பொதுப் பணித் துறை தற்காலிக் (வவுச்சா்) ஊழியா்கள் முதல்வா் அறிவித்தபடி ஊதிய உயா்வை வழங்கக் கோரி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில பொதுப் பணித் துறையில் 1,311 தற்காலிக ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவா்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அவா்களுக்கு ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், முதல்வா் அறிவித்தபடி அதற்கான அரசாணை வராததாலும், இந்த உத்தரவுக்கான கோப்பை அனுமதிக்காமல் உள்ளதாக தலைமைச் செயலரைக் கண்டித்தும், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள புதுவை தலைமைச்செயலக அலுவலகத்தை 70-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் திங்கள்கிழமை திடீா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பின் தலைவா் சரவணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், அந்தச் சங்க நிா்வாகிகள் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மாநிலத்தின் நிதி நிலைக்கு ஏற்ப செயல்படுவதாகவும், இந்த பிரச்னை தொடா்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை (அக்.26) அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தலைமைச் செயலா் உறுதியளித்தாா்.

முதல்வா் அறிவித்த ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமென தலைமைச் செயலரிடம் வலியுறுத்தியதாக அரசுப் பணியாளா்கள் நலக் கூட்டமைப்பின் தலைவா் சரவணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT