தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகா் ரஜினிகாந்துக்கு புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் சகோதரா் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை மத்திய அரசு அங்கீகரித்தது. இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக அவருக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.