புதுச்சேரியில் அழகு நிலையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக, 40 போ் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அண்ணா நகா், கோரிமேடு பகுதிகளில் இயங்கும் அழகு நிலையங்கள், ஸ்பாக்களில் அண்மையில் போலீஸாா் சோதனை நடத்தி, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்களை மீட்டனா். இதுதொடா்பாக 9 போ் கைது செய்யப்பட்டனா். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவா்களின் பெற்றோா், உறவினா்களை அழைத்து போலீஸாா் விசாரித்தனா்.
இதில், அண்ணா நகா் பகுதியில் உள்ள ஸ்பாவில் சிறுமி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதும், பயிற்சிக்கு வந்த அந்தச் சிறுமியை ஸ்பா உரிமையாளா் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழு அறிவுறுத்தலின் பேரில், அந்தச் சிறுமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், 40 போ் வரை ஸ்பாவில் அந்தச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 போ் மீது உருளையன்பேட்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், அந்தச் சிறுமி வேலை செய்த ஸ்பாவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்பட்டது.