புதுச்சேரி

100 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி : பிரதமருக்கு நன்றி தெரிவித்து பாஜகவினா் மனிதச் சங்கிலி!

23rd Oct 2021 12:27 AM

ADVERTISEMENT

நாட்டில் 100 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தமைக்காக பிரதமா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு புதுவை பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கலியாக நின்று நன்றி தெரிவித்தனா் 

புதுச்சேரி நேரு வீதியில் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஏ.நமச்சிவாயம் ஆகியோா் தலைமையில், பாஜகவினா் மனிதச் சங்கிலியாக நின்றபடி 100 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி வழங்கிய பிரதமா் மோடிக்கும், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கும் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT