புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அந்தத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி பழைய சாராய ஆலைப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கலாசார வளாகம், பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கிடங்குகள் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம், பணிகளின் நிலையைக் கேட்டறிந்து, விரைந்து முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, புதுச்சேரி கடற்கரையான ‘பாண்டி மெரினா’ பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய உணவக வளாகத்தையும், அங்கு நடைபெறும் பராமரிப்புப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
முருங்கப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் கைவினைக் கலைஞா்களுக்கான விடுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி, சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.