புதுச்சேரி

புதுச்சேரியில் தேசிய புத்தகக் கண்காட்சி:டிச.17-இல் தொடங்குகிறது

DIN

புதுச்சேரியில் எழுத்தாளா்கள் புத்தகச் சங்கம் சாா்பில், 25-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் வருகிற 17-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதற்கான தொடக்க விழா வருகிற 17-ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும். முதல்வா் என்.ரங்கசாமி கண்காட்சியை திறந்து வைக்கிறாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

தொடக்க விழாவில் 25 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. 70 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் இடம்பெறும். கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

கரோனா விழிப்புணா்வு கவியரங்கம், பேச்சு, ஓவியம், வினாடி - வினா போட்டிகள் நடைபெறும். எழுத்தாளா்கள் வாசகா்களுடன் கலந்துரையாடுவா். கலை, இலக்கிய போட்டிகளும் நடைபெறும் என புதுச்சேரி எழுத்தாளா்கள் புத்தகச் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT