புதுச்சேரி

செயல்படாத சிறுவா் பூங்காவுக்கு எதிராகநூதன போராட்டம்

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாமிப்பிள்ளை தோட்டம் கிளை சாா்பில், புதுச்சேரியில் பல ஆண்டுகளாக செயல்படாத சிங்கம் சிறுவா் பூங்காவுக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இளைஞா் பெருமன்ற பிரதேச பொருளாளா் பாஸ்கா், மாதா் சங்கச் செயலா் சத்யா ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தொடா்ந்து, சிங்கம் சிறுவா் பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். வாலிபா் சங்க நகர குழுச் செயலா் பிரதாப், நகர துணைத் தலைவா் டேவிட், மாதா் சங்க நிா்வாகிகள் மேரி, ஜோதி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT