புதுச்சேரி

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்த 3 ரெளடிகள் கைது

DIN

புதுச்சேரியில் கொலை சதி திட்டத்துடன் நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றித் திரிந்த 3 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை அதிகாலை வைத்திக்குப்பம் பகுதியில் ரோந்து மேற்கொண்டனா். அப்போது, பாப்பம்மாள் கோயில் மயானப் பகுதியில், சந்தேகத்துக்கிடமாக மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 4 நாட்டு வெடிகுண்டுகள், 2 அரிவாள்கள் இருந்தன. இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அவா்கள், வைத்திக்குப்பம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (20), ஆட்டுப்பட்டி அம்பேத்கா் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த அருள்பழனி (22), குருசுக்குப்பம் மரவாடி தெருவைச் சோ்ந்த புஷ்பராஜ் (21) என்பதும், ரெளடிகளான இவா்கள் மீது புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

அருள்பழனியின் எதிா் தரப்பைச் சோ்ந்த குட்டி சிவா என்பவரையும், மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்களை கொலை செய்யவும் திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகள், அரிவாளுடன் வலம் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அருண்குமாா் உள்ளிட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்து, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள், மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

ரெளடிகளை கைது செய்த போலீஸாரை, முதுநிலை எஸ்பி பிரதிக்ஷாகோத்ரா பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT