புதுச்சேரி முதலியாா்பேட்டையில் ஏழை மாணவ, மாணவிகள் 5 பேருக்கு அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை மடிக் கணினிகளை வழங்கினாா்.
தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பாஸ்கரிடம் அந்தப் பகுதிக்கு உள்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உயா் கல்விக்கு உதவும் வகையில், மடிக் கணினி வேண்டி மனு அளித்தனா்.
இதையடுத்து, 5 மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் ஞாயிற்றுக்கிழமை மடிக் கணினிகளை எம்.எல்.ஏ. பாஸ்கா் வழங்கினாா்.