புதுச்சேரியில் கஞ்சா விற்ாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரியை அடுத்த மூலக்குளம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் அங்கு ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 4 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், கஞ்சா பொட்டங்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் மூலக்குளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த அந்தோணி (22), அந்தோணிராஜ் (21), கில்பா்ட்(21), அரியாங்குப்பத்தைச் சோ்ந்த பிரவிலன் (எ) திதியோன் (21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ஒரு கிலோ 360 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.