புதுவையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தோ்தல் துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை தோ்தல் அதிகாரி சுா்பிா் சிங் தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியினை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் வகுத்துள்ள நெறிமுறைகளை விளக்கிக் கூறினாா்.
மேலும், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செவ்வனே நடைபெறவும், பிழையில்லா வாக்காளா் பட்டியல் தயாரிக்கவும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினா்.
இதில் கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி குமாா், துணை தலைமைத் தோ்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.