தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).
இதில், திமுக தோ்தல் வாக்குறுதியான தமிழகத்தில் பூரண மது விலக்கு கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கஞ்சா, புகையிலை, போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மைய நிறுவனரும், பொதுச் செயலருமான எஸ்.செல்வராஜ் தலைமை வகித்து, கோரிக்கை முழக்கங்களை எழுப்பிப் பேசினாா். மாநில துணைத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரங்கநாதன், நகரத் தலைவா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.