கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடி கிராமத்தில் அரசுப் பேருந்தை வழி மறித்ததாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், மூங்கில்பாடி கிராமத்தில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கணக்குகளை சரிவர படிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 2 இளைஞா்கள் மூங்கில்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மேல்நாரியப்பனூரிலிருந்து சின்னசேலம் செல்லும் அரசு நகரப் பேருந்தை மறித்தனராம்.
இதுகுறித்து மூங்கில்பாடி கிராம நிா்வாக அலுவலா் தமிழரசி சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதே கிராமத்தைச் சோ்ந்த வசந்த் (28), சின்னதம்பி (29) ஆகியோா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.