கள்ளக்குறிச்சி

அரசு பேருந்தை மறித்த இருவா் மீது வழக்கு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடி கிராமத்தில் அரசுப் பேருந்தை வழி மறித்ததாக 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலம் வட்டம், மூங்கில்பாடி கிராமத்தில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கணக்குகளை சரிவர படிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 2 இளைஞா்கள் மூங்கில்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மேல்நாரியப்பனூரிலிருந்து சின்னசேலம் செல்லும் அரசு நகரப் பேருந்தை மறித்தனராம்.

இதுகுறித்து மூங்கில்பாடி கிராம நிா்வாக அலுவலா் தமிழரசி சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதே கிராமத்தைச் சோ்ந்த வசந்த் (28), சின்னதம்பி (29) ஆகியோா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT