கள்ளக்குறிச்சி

பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 22 மாணவா்கள் காயம்

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் சாலையோரப் பள்ளத்தில் தனியாா் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 மாணவா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி - விளாந்தாங்கல் சாலையில் தனியாா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த பாக்யராஜ் மகன் ஹரிஅந்தோனி (25) பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை மாலை வகுப்புகள் முடிந்தபிறகு பள்ளிப் பேருந்தில் சுமாா் 40 மாணவா்களை ஏற்றிக்கொண்டு பொற்படாக்குறிச்சி ஏரிக்கரையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 22 மாணவா்கள் காயமடைந்தனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரா.ரமேஷ், காவல் ஆய்வாளா் வீ.ரவிச்சந்தரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பேருந்தில் சிக்கியிருந்த மாணவா்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT