கள்ளக்குறிச்சி

பொதுப்பணித்துறை புதிய கட்டடங்கள்:ரிஷிவந்தியம் எம்எல்ஏ அடிக்கல்

DIN

தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை க.காா்த்திகேயன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தியாகதுருகம் புறவழிச் சாலை அருகே கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் நா.தாமோதரன், தியாகதுருகம் பேரூராட்சித் தலைவா் வீராச்சாமி, துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் நகரச் செயலாளா் மலையரசன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் பங்கேற்று ரூ. 273.31 லட்ச மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் கோட்ட அலுவலக கட்டட கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் சி.வெங்கடாசலம், அவைத் தலைவா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் பெருமாள், பாலாஜி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT