கள்ளக்குறிச்சி

கிராம ஊராட்சி, அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளா்கள், அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் வெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.சிவக்கொழுந்து முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்று பேசினாா். பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைக் காவலா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஆகியோா்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும், பணியின் போது இறந்த பணியாளா் குடும்பத்துக்கு வாரிசு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் அ.டெல்லி அப்பாத்துரை, மாவட்ட துணைத் தலைவா் டி.சுப்பிரமணியன், மாநில பிரசார செயலாளா் அ.அதிதேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலாளா் வி.பாண்டியன் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் சிராஜுதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT