கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே----கிணற்றில் தவறி விழுந்த இரு சிறுவா்கள் பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

சங்கராபுரம் வட்டம், பிரம்மகுண்டம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தொழிலாளி குமாரின் மகன்கள் தமிழ்மாறன் (10), மோகனபிரியன் (9). இருவரும் அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் முறையே 5, 4-ஆம் வகுப்புகள் படித்து வந்தனா்.

சகோதரா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை அந்தக் கிராமத்திலுள்ள அப்துல் கபூருக்குச் சொந்தமான விவசாயக் கிணறில் இறங்கினராம். அப்போது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தனா். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினா்.

இவா்களை பெற்றோா், உறவினா்கள் தேடிச் சென்றபோது, இருவரின் காலணிகளும் கிணற்றிலுள்ள தண்ணீரில் மிதந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயேந்திரன் தலைமையிலான குழுவினா், கிணற்றிலிருந்த தண்ணீரை மோட்டாா் மூலம் வெளியேற்றி தமிழ்மாறன், மோகனபிரியனின் உடல்களை மீட்டனா். பின்னா், அவை உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT