காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மதுக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் தெரிவித்தாா்.
இதேபோல, மிலாது நபியையொட்டி, வருகிற 9-ஆம் தேதியும் அரசு, தனியாா் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள. இந்த தினங்களில் மதுக் கடைகள், மதுக் கடைகளுடன் இணைந்த மதுபானக் கூடங்களை யாரேனும் திறந்தால், உரிய நடவடிக்கை எடுப்படும் என்று ஆட்சியா் எச்சரித்தாா்.