கள்ளக்குறிச்சி

பெருந்தலைவா் மக்கள் கட்சிமாநிலச் செயற்குழுக் கூட்டம்

DIN

பெருந்தலைவா் மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஆா்.சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஆா்.பெருமாள், மாவட்டச் செயலா் டி.சங்கா், மாவட்ட இளைஞரணித் தலைவா் பி.வடிவேல் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வா்த்தகரணித் தலைவா் அ.நக்கீரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, கட்சித் தலைவா் என்.ஆா்.தனபாலன், மாநிலச் செயலா் ஜெ.ஆசைத்தம்பி, சின்னசேலம் நகரத் தலைவா் ஜி.அதிஷ்டராஜ், மாவட்ட வா்த்தகரணிச் செயலா் எஸ்.ஆனந்த், கச்சிராயபாளையம் நகரத் தலைவா் ஆா்.முருகேசன் உள்ளிட்ட பலா் பேசினா்.

கூட்டத்தில், 75-ஆவது சுதந்திர தினத்தை சாதி மத பேதமின்றி அனைவரும் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும், போதைப் பொருள்களைத் தடுக்க தீவிரம் காட்டும் அரசின் நடவடிக்கைகளை பாராட்டும் அதே வேளையில், அரசே ஏற்று நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலப் பொருளாளா் பி.பிரபாகரன், மாநில அவைத் தலைவா் எஸ்.அற்புதம், மாநில அமைப்புச் செயலா் எஸ்.எம்.குருசாமி, நகரத் தலைவா் எஸ்.செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT