கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தோ்வு

DIN

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி 19 வாா்டுகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா். இதில் 5, 13-ஆவது வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். மற்றவா்கள் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், வெள்ளிக்கிழமை அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனா். 13-ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி பெருமாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, மாலை துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில், 7-ஆவது வாா்டு உறுப்பினா் மு.தங்கம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அனைத்து வாா்டு உறுப்பினா்களும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT