கள்ளக்குறிச்சி

வீட்டுச் சுவா் இடிந்து 5 போ் காயம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவா் பரிமளாகாந்தி (45). இவரது மனைவி பா்வதவா்த்தினி (40). இத்தம்பதியருக்கு காா்த்திகா (19), லீனா (17) என்ற இரு மகள்களும், மகேஸ்வரன் (15) என்ற மகனும் உள்ளனா். இவா்களில் காா்த்திகா கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாம் ஆண்டும், பள்ளி ஒன்றில் லீனா பிளஸ் 2 வகுப்பும், மகேஸ்வரன் பத்தாம் வகுப்பும் பயில்கின்றனா்.

வியாழக்கிழமை இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, தொடா் மழையால் நனைந்திருந்த வீட்டின் ஒரு பக்கச் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காா்த்திகா பலத்த காயமும், எஞ்சிய நான்கு போ் லேசான காயமும் அடைந்தனா். அவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT