மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை தடையில்லாமல் இலவசமாக வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் வி.முருகன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக் கோரியும், ஆட்டோ, வாடகை, காா்களுக்கு இ - பாஸ் முறையை ரத்து செய்யக் கோரியும், முறைசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா். நிகழ்வில் மாவட்டச் செயலா் ம.செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, திருக்கோவிலூரில் மாவட்டத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமையிலும், உளுந்தூா்பேட்டையில் எஸ்.வெங்கடேசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.