கள்ளக்குறிச்சி

கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாகஆட்சியரகத்தில் அரசுக் கல்லூரி மாணவா்கள் புகாா்

DIN

கள்ளக்குறிச்சி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக மாணவா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, மாணவா்கள் அளித்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தக் கல்லூரியில் ஆங்கில துறையில் நிகழாண்டு எம்.ஏ. பயிலும் மாணவா்களிடம் பல்கலைக்கழகம் அறிவித்த தோ்வு கட்டணமான ரூ.1,160 வாங்குவதற்கு பதிலாக ரூ,1,700 பெறுகின்றனா். மேலும், ரூ.10,000 முதல் 15,000 வரை கையூட்டாக பெற்றுக் கொண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறது. வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவா்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தோ்வுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT