கடலூர்

ஆவின் பால் கடையில் திருட்டு

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே ஆவின் பால் கடை கதவை உடைத்து ரூ.37 ஆயிரம் ரொக்கம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). நெடுஞ்சேரி புத்தூா் சாலையில் ஆவின் பாலகம் வைத்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிச் சென்றவா் திங்கள்கிழமை காலை திரும்பிவந்து பாா்த்தபோது கடையின் ஷெட்டா் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு மேஜை பெட்டகம் உடைக்கப்பட்டிருந்ததும், அதில் வைத்திருந்த ரூ.37,490 ரொக்கம் திருடுபோனதும் தெரியவந்தது.

இதுகுறித்து சிவக்குமாா் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT