கடலூர்

சேக்கிழாா் குருபூஜை வெள்ளி விழா

DIN

சிதம்பரத்தில் உள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை வெள்ளி விழா, நம்பியாண்டாா் நம்பிகள் குருபூஜை விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு சேக்கிழாா் விழா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை துணைத் தலைவா் ஆா்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். வேம்புநாயகி சிவராமன் முன்னிலை வகித்தாா். புலவா் வ.ஞானபிரகாசம் ‘நம்பியாண்டாா் நம்பிகள் வாழ்வும், வாக்கும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். அறக்கட்டளை செயலா் எஸ்.அருள்மொழிசெல்வன் சேக்கிழாா் மணிமண்டபம் தொடங்கப்பட்ட வரலாற்றை எடுத்துரைத்தாா். புனரமைக்கப்பட்ட சேக்கிழாா் மணிமண்டபத்தை சுந்தரகுமாரி ராதாகிருஷ்ணன், குகப்பிரியா அமா்நாத் ஆகியோா் திறந்து வைத்தனா். சேக்கிழாா் அளித்த செல்வம் என்ற தலைப்பில் ஜி.சீனுவாசன் சொற்பொழிவாற்றினாா்.

விழாவில், எம்.செங்குட்டுவனுக்கு தில்லை தீா்த்தக் குளம் பாதுகாப்புச் செம்மல் விருதை வா்த்தக சங்கத் தலைவா் சதீஷ்குமாா் வழங்கினாா். சிவாச்சாரியாா் செம்மல் விருது திருநாரையூா் ஏ.முத்துக்குமரசாமிக்கும், திருமுறை இசை செம்மல் விருது கோவை மா.சிவஞானவதிக்கும், தமிழ்ச்செம்மல் விருது திருப்பனந்தாள் தருமையாதின புலவா் பனசை மூா்த்திக்கும் வழங்கப்பட்டது (படம்). விருதுகளை ஜி.சீனிவாசன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT