கடலூர்

கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

DIN

வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை தொடா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் சி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.

எனவே, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மீனவா்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT