கடலூர்

தந்தை மீது தாக்குதல்:மகன் கைது

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே தந்தையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் வட்டம், மாத்தூா் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (65). இவா், மாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இவரது மகன் கலைவாணன்(32), தொழிலாளி. இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். கடந்த 1-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கலைவாணன் கட்டையால் தாக்கியதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, கலைவாணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT