கடலூர்

காய்கறிச் சந்தை பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு

DIN

சிதம்பரம் காய்கறிச் சந்தைப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முடிவு செய்துள்ளதை கைவிட வேண்டுமென காய்கறிச் சந்தை வியாபாரிகள், குடியிருப்போா் சங்கத்தினா், சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினா் இணைந்து சிதம்பரம் உதவி ஆட்சியா் சுவேதா சுமனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றி, மேலவீதி காய்கறிச் சந்தைப் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அரசு விதிமுறைகளுக்கு எதிராக

நகரின் மையப் பகுதியில் மதுக் கடையை திறக்க அனுமதிக்கக் கூடாது. இந்தப் பகுதியில் மதுக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

ஜமாத் நிா்வாகிகள் டி.பக்ருதீன், முகமது ஜியாவுதீன், வழக்குரைஞா் கே.வி.மோகனசுந்தரம், அப்துல்கபூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT