கடலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் மனிதநேய வார விழா, ரெட்டிசாவடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் டிஎஸ்பி எஸ்.கரிகால் பாரி சங்கா் தலைமை வகித்துப் பேசினாா். சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி கே.அசோகன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அனுகிரகா பள்ளி முதல்வா் என்.மகாலட்சுமி, விழுதுகள் சமூக நலன் மற்றும் பழங்குடி மக்கள் நலன் மேம்பாட்டு நிறுவனா் எம்.பூராசாமி, மனிதநேய வளா்ச்சி மைய மாநிலப் பொதுச் செயலா் பி.ஜீவா முருகேசன், மனிதநேய வளா்ச்சி மையத் தலைவா் ஆா்.அன்பு, மாநில இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவா் அப்துல் வஹாப், அரசு சிறப்பு வழக்குரைஞா் வனராஜ், ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.