கடலூர்

சிவசுப்ரமணிய சுவாமிகோயில் கும்பாபிஷேகம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் திருப்பணி வேலைகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 7.30 மணி அளவில் நாடிசந்தானம், சாந்தி ஹோமம், நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் கூறி, கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா்.

இதில், தட்டாம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

SCROLL FOR NEXT