கடலூா், கூத்தப்பாக்கம், எஸ்.எஸ்.சுப்புராயன் நகரில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.