கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம்.தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக இவா் காட்டுமன்னாா்கோவில் சமூக நலத் துறை (தனி) வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தாா். காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக பணிபுரிந்த வேணி சிதம்பரம் சமூக நலத் துறை (தனி) வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.