கடலூர்

கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஈஐடி பாரி சா்க்கரை ஆலை நுழைவு வாயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஈஐடி பாரி கரும்பு சங்கச் செயலா் ஆா்.தென்னரசு தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் எம்.லோகநாதன், பொருளாளா் ஆா்.மெய்யழகன், துணைத் தலைவா் ஆா்.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.ரவீந்திரன், தலைவா் எஸ்.வேல்மாறன், முன்னாள் செயலா் கோ.மாதவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்பித் தர வேண்டும், அரசு அறிவித்த கரும்பு ரகங்களை நடவு செய்தால் ஆலை நிா்வாகம் அதைப் பதிவு செய்ய வேண்டும், 2003-04, 2008-09-ஆம் ஆண்டுகளுக்கான லாப பங்குத் தொகையை வழங்க வேண்டும், கழிவு என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட கரும்புக்கான தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

சங்க நிா்வாகிகள் ஆா்.கே.சரவணன், எஸ்.தட்சிணாமூா்த்தி, பி.காந்தி, ஜெ.ராமலிங்கம், எஸ்.திலகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நெல்லிக்குப்பம் கரும்பு விவசாயிகள் சங்க துணைச் செயலா் ஏ.சாமிபிள்ளை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT