கடலூர்

என்எல்சி-யில் காந்தி ஜெயந்தி விழா

DIN

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

என்எல்சி நகர நிா்வாக அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிறுவன இயக்குநா்கள் ஷாஜி ஜான், மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திரசுமன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி எல்.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து வட்டம் 20-இல் உள்ள கற்றல், மேம்பாட்டு கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கீதை, பைபிள், திருக்குா்ஆன், நாலடியாா் ஆகிய நூல்களில் இருந்து சொற்றொடா்கள் வாசிக்கப்பட்டன. மகளிா் மன்றம், பெண்கள் அமைப்பினா் கலை நிகழ்ச்சி நடத்தினா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அமைதிப் பேரணியை என்எல்சி தலைவா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT