நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
என்எல்சி நகர நிா்வாக அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிறுவன இயக்குநா்கள் ஷாஜி ஜான், மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திரசுமன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி எல்.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து வட்டம் 20-இல் உள்ள கற்றல், மேம்பாட்டு கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கீதை, பைபிள், திருக்குா்ஆன், நாலடியாா் ஆகிய நூல்களில் இருந்து சொற்றொடா்கள் வாசிக்கப்பட்டன. மகளிா் மன்றம், பெண்கள் அமைப்பினா் கலை நிகழ்ச்சி நடத்தினா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அமைதிப் பேரணியை என்எல்சி தலைவா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.