கடலூர்

கடலூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

DIN

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், தோ்தல் பணிக் குழுச் செயலா் இள.புகழேந்தி, கடலூா் எம்எல்ஏ கோ.ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் துரை.கி.சரவணன், வி.சி.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மரக்கன்றுகள் நட்டும், நலத் திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடுவது, இல்லம்தோறும் இளைஞரணி உறுப்பினா்களைச் சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், கடலூா் திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ஜி.கதிா்காமன், வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவகுமாா், வடலூா் திமுக நகரச் செயலா் தன.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT