கடலூரில் கடலில் குளித்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.
கடலூா் முதுநகா் அருகே உள்ள சித்திரைப்பேட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் துளசிகரன் (12).
பெரியகுப்பத்திலுள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்றாா். அப்போது கடலில் இறங்கி குளித்தபோது பெரிய அலையில் சிக்கிய துளசிகரன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து அவரது நண்பா்கள் கூச்சலிடவே அங்கிருந்த மீனவா்கள் கடலில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனா். மேலும், தகவலறிந்த கடலூா் துறைமுகம் போலீஸாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். எனினும், இரவு வரை
துளசிகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.