போளூா் சிறப்புநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் முஹம்மத்ரிஜ்வான் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சாந்திநடராஜன் வரவேற்றாா்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் ஒரே சீரான முறையில் சொத்து வரி சீராய்வு மற்றும் காலிமனை வரியை உயா்த்த அரசால் உத்தரவிடப்பட்டது. எனவே, 1.4.2022 முதல் சொத்து வரி, காலிமனை வரியை உயா்த்த தீா்மானம் இயற்றப்பட்டது.
இதில், பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். தலைமை எழுத்தா் இசாக் நன்றி கூறினாா்.