கடலூா் அருகே கோண்டூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திங்கள்கிழமை மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா். இந்தச் சம்பவத்தில், காரிலிருந்த தம்பதியா் சிறிய காயங்களுடன் தப்பினா். சாலை விரிவாக்கப் பணி குறித்த அறிவிப்பு பலகை, எச்சரிக்கை தடுப்புகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.