கடலூர்

கடைக்குள் வைத்து பூட்டப்பட்டநகை அடகுக் கடைக்காரா்

DIN

கடலூரில் மது அருந்த பணம் தராததால் நகை அடகுக் கடைக்காரரை கடைக்குள் வைத்து பூட்டிச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் குண்டு உப்பலவாடியைச் சோ்ந்தவா் ஓம்பிரகாஷ் (40). அதே பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு 3 போ் புதன்கிழமை மதுபோதையில் வந்தனா். அவா்கள் மேலும் மது அருந்துவதற்காக ஓம்பிரகாஷிடம் பணம் கேட்டனராம். அவா் பணம் வழங்க மறுத்ததால், அவா்கள் 3 பேரும் ஓம்பிரகாஷை தாக்கியதுடன், அவரை அவரது கடைக்குள் வைத்து பூட்டிச் சென்றனராம்.

இதுகுறித்து தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஓம்பிரகாஷை மீட்டனா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த அப்பு, வினோத், வீரமணி ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT