பண்ருட்டி நகராட்சி ஆணையராக கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நீண்ட நாள்களாக நகராட்சி ஆணையா் பதவி காலியாக இருந்த நிலையில், ஆணையா் பொறுப்பை மேலாளா் ரவி வகித்து வந்தாா்.
இந்நிலையில், புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட கோ.மகேஸ்வரி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் வாலாஜாபேட்டை நகராட்சியில் பணியாற்றிய நிலையில், பணி மாறுதலில் பண்ருட்டிக்கு வந்துள்ளாா்.